For Daily Alerts
Just In
செல்போன் சோதனையில் ரகளை..வேலூர் சிறையில் போலீஸ் - கைதிகள் மோதல்: 3 கைதிகள் காயம்
வேலூர்: வேலூர் சிறையில் செல்போன் சோதனை நடத்திய போலீசாருக்கும், கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 3 கைதிகள் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேலூர் சிறையில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், கைதிகளின் அறைகளில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.
ஆனால், இதற்கு கைதிகள் எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது. போலீசார் சோதனை நடத்தக் கூடாது என கைதிகள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், போலீசாருக்கும், கைதிகளுக்கும் இடையே மோதல் உண்டானது.
இதில், போலீசாரின் தடியடியில் சிக்கி 3 கைதிகள் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments
English summary
In Vellore prison, a clash broke out between the police and prisoners.
Story first published: Friday, January 30, 2015, 17:30 [IST]