For Daily Alerts
Just In
கோயில் திருவிழாவில் இருதரப்பினரிடையே மோதல்.. 11 பேர் படுகாயம்.. அறந்தாங்கியில் பதற்றம்
கோயில் திருவிழாவில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் அறந்தாங்கியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை: கோயில் திருவிழாவில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் அறந்தாங்கியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ளது சீனமங்கலம். இந்த ஊரில் உள்ள கோயில் ஒன்றில் இன்று திருவிழா நடைபெற்றது. அப்போது, இருதரப்பினரிடையே மோதல் மூண்டது.
மோதல் தீவிரமடைந்ததில், 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மோதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
English summary
Elevan were injured in clash at Aranthangi temple festival in Pudukottai district.
Story first published: Friday, August 11, 2017, 23:33 [IST]