தினகரன் குக்கருடன் செல்ல வேண்டியதுதான்... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கிண்டல்
ஆர்.கே.நகரில் தினகரன் குக்கருடன் செல்ல வேண்டியதுதான் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை : ஆர்.கே.நகரில் சுயேச்சையாக போட்டியிடும் தினகரன் குக்கருடன் செல்ல வேண்டியதுதான் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார்.
ஆர்.கே.நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக, திமுக, தினகரன் அணி ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரசாரமும் களைகட்டியுள்ளது.
நீயா நானா என்பதை போல் ஒருவர் மீது ஒருவர் விமர்சனங்களை முன்வைத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் ஆர்.கே.நகரில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், ஆர்.கே.நகரில் போட்டியிடும் தினகரன் குக்கருடன் செல்ல வேண்டியதுதான். அதிமுக டெபாசிட் வாங்காது என்று கூறிய ஸ்டாலினுக்கு
இந்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர்.
ஆளும் கட்சியை ஜெயிக்க வைத்தால்தான் நலத்திட்டங்கள் நிறைவேறும். ஆர்.கே.நகரில் வீடு இல்லாத மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
ஆனால் பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகளில் அதிமுக பெரும் பின்னடைவை சந்திப்பதும், அவர்களை தினகரன் முன்னோக்கி செல்வதும் குறிப்பிடத்தக்கது.