வாவ்.. சென்னையின் முதல் அடுக்குமாடி பஸ் ஸ்டாண்ட்.. மாதவரத்தில் ரூ. 95 கோடியில்!
மாதவரத்தில் சுமார் 95 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட அடுக்குமாடி புறநகர் பேருந்து நிலையத்தை காணொளி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
Recommended Video
சென்னை: மாதவரத்தில் சுமார் 95 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட அடுக்குமாடி புறநகர் பேருந்து நிலையத்தை காணொளி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சிஎம்டிஏ மாதவரம் ரவுண்டானா அருகில் 8 ஏக்கர் பரப்பளவில் ரூ 95 கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடி வசதியுடன் பேருந்துகள் நிறுத்துவதற்கு புதிய புறநகர் பேருந்து நிலையத்தை கட்டியுள்ளனர்.
இந்த பஸ் நிலையத்தில் தரை தளத்தில் 51 பேருந்துகளும் மேல்தளத்தில் 50 பேருந்துகளும் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் 9 மாநகரப் பேருந்துகள் நிறுத்துவதற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆந்திர மாநிலம் நெல்லூர், திருப்பதி, ஹைதராபாத், தெலுங்கானா ஆகிய நகரங்களுக்கு செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகிறது. மேலும் பயணிகள் வசதிக்காக தங்கும் வசதியும் கழிப்பிட வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்துத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் , மற்றும் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.