ஈரானில் சிக்கித் தவித்து வரும் மீனவர்களை மீட்க மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்
ஈரானில் சிக்கித் தவித்து வரும் மீனவர்களை மீட்க மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
Recommended Video
சென்னை : மீன்பிடித் தொழிலுக்காக ஈரான் சென்று அங்கு சிக்கித் தவித்து வரும் 21 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மீன்பிடித் தொழிலுக்காக தமிழகத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள் ஈரான் சென்றனர். அவர்களை ஈரானைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று வேலையில் அமர்த்தி இருந்தது.
இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களாக ஊதியம் வழங்காததால், மீனவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் அவர்களை குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடியாதபடி நிறுவன அதிகாரிகள் சிறைப்படுத்தினர்.
இதனால் மீனவர்களின் குடும்பங்கள் மிகுந்த கவலை அடைந்தனர். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் மீனவர்களை இந்தியத் தூதரகம் மூலம் மீட்க வேண்டி எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.