வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சாக்கடையை சுத்தம் செய்தார் முதல்வர்!
Recommended Video
புதுவை: வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு புதுவை முதல்வர் நாராயணசாமி சாக்கடையை சுத்தம் செய்தார்.
நெல்லித்தோப்பு நாராயணசாமியின் சொந்த தொகுதியாகும். இன்று அப்பகுதியில் தூய்மை பணியை தொடங்கி வைத்தார். பஅப்போது நெல்லித்தோப்பு மார்க்கெட் அருகே வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதை முதல்வர் கவனித்தார்.
இதையடுத்து வாய்க்காலில் தானே இறங்கி குப்பைகளை அகற்றினார். தன்னுடைய வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கால்வாயில் இறங்கி அடைப்புகளை நீக்கினார். இந்தளவுக்கு இதுவரை எந்த முதல்வரும் இறங்கி வந்து மக்கள் பணிகளை செய்தது கிடையாது.
Clean India ; Pudhucherry CM Narayanasamy cleaning drainage #SwachhBharatMission pic.twitter.com/U1eYpiqIlS
— Manoj Prabakar S (@imanojprabakar) October 1, 2018
ஆனால் இதை செய்த நாராயணசாமியை பார்த்த அப்பகுதி மக்கள் நெகிழ்ந்து போயினர். மிகவும் துர்நாற்றம் வீசிய அந்த சாக்கடையில் முதல்வர் இறங்கியதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.