இப்போ ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. அடுத்தது 'நாற்காலி" குறி வைக்கிறார் தினகரன்?
இப்போ ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. அடுத்தது 'நாற்காலி" குறி வைக்கிறார் தினகரன்?
Recommended Video
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏவாகிவிட்ட தினகரன் அடுத்ததாக 'முதல்வர் நாற்காலிக்கு' குறிவைத்து காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
முதல்வர் எடப்பாடியாருக்கு எதிராக 18 எம்.எல்.ஏக்களை களமிறக்கிப் பார்த்தார் தினகரன். ஆனால் முதல்வர் மாற்றப்படவில்லை. இதற்கு மாறாக 18 எம்.எல்.ஏக்களின் பதவிதான் பறிபோனது.
50 எம்.எல்.ஏக்கள் ஆதரவு?
இதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தினகரன் போட்டியிட்டு தற்போது எம்.எல்.ஏவாகிட்டார். தினகரனுக்கு 50 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர் என்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்.
முதல்வர் பதவிக்கு குறி
தினகரன் வெற்றி பெற்ற அன்று இரவே சீனியர் அமைச்சர்கள் சிலரைத் தவிர பெரும்பாலானோர் தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்து அடுத்த தாவலுக்கு தயாராகிவிட்டனர். அதே நேரத்தில் தினகரனோ தாம் குறிவைப்பது 'நாற்காலி'க்குதான் என்பதை பகிரங்கமாக சொல்லாமலேயே காய்நகர்த்தி வருகிறார்.
எம்.எல்.ஏக்கள் வளைப்பு
இதன் முதல் கட்டமாகத்தான் ஆட்சி கவிழும் என்கிற மிரட்டலை கையிலெடுத்திருக்கிறாராம். ஆட்சி கவிழப் போகிறது என்று சொல்லியே கணிசமான எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் வரவழைத்துவிட முடியும் என்பதுதான் தினகரனின் வியூகமாம்.
இமேஜை தக்க வைக்க முயற்சி
அதேநேரத்தில் சசிகலாவை எப்படி முதல்வராக்க வேண்டும் என்ற கோஷங்கள் முன்வைக்கப்பட்டதோ அதே பாணியில், நாளை முதல்வர் தினகரன் என நாஞ்சில் சம்பத், புகழேந்தி வகையறார்க்கள் பேசவும் தொடங்கிவிட்டனர். தமக்கு இருக்கும் நல்ல இமேஜை அப்படியே முதல்வர் நாற்காலி வரை எப்படியாவது வெற்றிகரமாக நகர்த்திவிட வேண்டும் என்பதுதான் தினகரனின் படுதீவிரமான வியூகமாம்.