For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓகி புயலில் உயிரிழந்த மீனவர் அல்லாதவரின் குடும்பத்தினருக்கு நிவாரணத்தை உயர்த்திய முதல்வர்

ஓகி புயலில் உயிரிழந்த மீனவர் அல்லாதோரின் குடும்பத்தினருக்கு நிவாரணத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உயர்த்தி வழங்கியுள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: ஓகி புயலில் உயிரிழந்த மீனவர் அல்லாதோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

கடந்த 30-ஆம் தேதி தென் தமிழகத்தையே புரட்டி போட்ட ஓகி புயலால் பொருட்சேதம், உயிர் சேதம் என ஏற்பட்டது. ஓகி புயலில் உயிரிழந்த மீனவர் அல்லாதவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணமாக அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

CM raises relief funds for non fishermen who died in Ockhi

இந்நிலையில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 15 நாள்களுக்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்ய கன்னியாகுமரிக்கு சென்றிருந்தார்.

அப்போது தமிழக அரசு அறிவித்த நிவாரணம் போதாது என்றும் அதை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் மீனவர் அல்லாதோர் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 6 லட்சம் உயர்த்தி மொத்தம் ரூ. 10 லட்சமாக வழங்கப்படும் என்று முதல்வர் இன்று அறிவித்துள்ளார்.

English summary
CM Edappadi Palanisamy raises relief funds for non fishermen's family who died in Ockhi Cyclone. He raised the amount to Rs. 10 lakhs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X