For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உதான் திட்டத்தின் கீழ் ஓசூர், நெய்வேலியில் விமான நிலையம் அமைக்க முதல்வர் கோரிக்கை

உதான் திட்டத்தின் கீழ் ஓசூர், நெய்வேலியில் விமான நிலையம் அமைக்க முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை : உதான் திட்டத்தின் கீழ் ஓசூர் மற்றும் நெய்வேலியில் விமான நிலையங்கள் அமைக்க வேண்டி விமான போக்குவரத்துத்துறை மற்றும் தொழிற்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசு உதான் திட்டத்தின் கீழ், சிறு நகரங்களையும் வளர்ந்து வரும் தொழிற்நகரங்களையும் விமான சேவையின் மூலம் இணைத்து வருகிறது. அதன்படி சமீபத்தில் சேலம் விமான நிலையம் பயன்பாட்டிற்கு வந்தது.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உதான் திட்டத்தின் கீழ் நெய்வேலி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் விமான நிலையம் அமைக்க வேண்டி மத்திய தொழிற்துறை மற்றும் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், அதில், ஓசூர் விமான நிலையத்தையும் விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரக்கோரி சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திற்கு அறிவுறுத்துமாறும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
CM writes letter to CA Minister to bring Airport on Ramnad and Neyveli. He also mentioned that Hosur Airport is also need to be operated.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X