For Daily Alerts
Just In
கூட்டுறவு சங்க தேர்தல் வழக்கில் ஜூலை 23 இல் தீர்ப்பு?
கூட்டுறவு சங்க தேர்தல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 23 இல் தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 23 ஆம் தேதி தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த மே மாதம் நடத்தப்பட்ட தேர்தலில் முறைகேடு ஏற்பட்டதாக திமுக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது.
தொடர்ந்து இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீர்ப்பு தேதி ஜூலை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதனால், கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு வழக்கில் இறுதி விசாரணை ஜூலை 23 நடைபெற உள்ளது. இறுதி விசாரணை முடிந்து, அன்றே தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது.
Comments
English summary
Co-operative society election scam case’s verdict expecting should come on July 23 by Madras high court.
Story first published: Monday, July 9, 2018, 14:00 [IST]