கோவை மாணவி பலி: முதல்வருடன் அமைச்சர் கே.பி.அன்பழகன் தீவிர ஆலோசனை
கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் மாணவி பலியானது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Recommended Video
கோவை: கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் மாணவி பலியானது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள கலைமகள் கல்லூரி என்ற தனியார் கல்லூரியில் நேற்று பேரிடர் மேலாண்மை பயிற்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது லோகேஸ்வரி என்ற மாணவி பரிதாபமாக பலியாகி உள்ளார்.
மாடியில் இருந்து பயிற்சியாளர் மூலம் அவர் தள்ளிவிடப்பட்டு இறந்து இருக்கிறார். மாடியில் இருந்து கீழ் விழும் போது மாணவியின் தலை மாடியின் விளிம்பில் மோசமாக அடிபட்டு சம்பவ இடத்திலே மரணம் அடைந்துள்ளார். கவனக்குறைவாக செயல்பட்ட பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பிரச்சனை தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. எந்த பாதுகாப்பும் இல்லாமல் எப்படி, பேரிடர் மேலாண்மை பயிற்சிக்காக மாணவிகள் பயன்படுத்தப்பட்டார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் அந்த கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராகவும் குரல்கள் வர தொடங்கி இருக்கிறது.
கோவை மாணவி பலியானது குறித்து தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆலோசனை நடத்தி வருகிறார். கல்வித்துறை அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
கல்லூரி மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து கே.பி.அன்பழகன் முதல்வருடன் ஆலோசனை நடத்துவதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.