For Daily Alerts
Just In
சோமனூர் பேருந்து நிலைய கட்டிடம் இடிந்து விபத்து... உதவிக்கு ஃபேஸ்புக்கில் அழைப்பு
கோவை மாவட்டம் சோமனூரில் பேருந்து நிலைய கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர்.உதவிக்கு ஃபேஸ்புக் மூலம் அழைப்பு விடுத்துள்ளார் ஒரு சமூகவலைதளவாசி.
கோவை: தொடர் மழை காரணமாக விரிசல் விட்டிருந்த சோமனூர் பேருந்து நிலைய கட்டிடம் இடிந்து விழுந்து 5 பேர் உயிரை காவு கொண்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க முகநூல் மூலம் அழைப்பு விடுத்துள்ளார் ஒருவர்.
கடந்த சில தினங்களாக கோவை சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர்மழை பெய்த காரணத்தால் விரிசல் விட்டிருந்த கட்டிடம் இன்று திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர்.
சம்பவ இடத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிர்பலி மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மீட்கப்பட்ட பலரும் மருத்துவமனைக்கு சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
சோமனூர் பேருந்து நிலையம் இடிந்து விழுந்ததில் பலர் பலி-வீடியோ
உடனடியாக உதவிக்கு வருமாறு ஃபேஸ்புக் மூலம் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.
Comments
English summary
At least Five persons were killed in the collapse of busstand Building at Somanur in Coimbatore district.
Story first published: Thursday, September 7, 2017, 14:53 [IST]