For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Breaking News: காவிரி கரையோர மக்களுக்கு சேலம் ஆட்சியர் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சேலம்: காவிரி ஆற்றில் யாரும் இறங்கவோ அல்லது குளிக்கவோ கூடாது என்று சேலம் ஆட்சியர் ரோகிணி எச்சரிக்கை விடுத்துள்ளார். அணையிலிருந்து தற்போது 20,000 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இரவு 8 மணியளவில் இது 30,000 ஆயிரம் கனஅடியாக உயரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Collector Rohini warns the people who lives in banks of Cauvery

Newest First Oldest First
6:38 PM, 22 Jul

கீழ்ப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயில் பழுது

செண்ட்ரல் – விமான நிலையம் சென்ற மெட்ரோ ரயில் பழுது

கீழ்ப்பாக்கத்தில் மெட்ரோ ரயில் பழுதால் மற்ற ரயில்சேவை பாதிப்பு

பழுதான ரயிலை மெட்ரோ ரயில் அதிகாரிகள் வந்து சீரமைத்தனர்

பழுதான ரயிலை சரி செய்த பிறகு மீண்டும் மெட்ரோ ரயில் இயக்கம்

6:01 PM, 22 Jul

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது -ராகுல் காந்தி

2019 தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது - காங்கிரஸ் தலைவர் ராகுல்

கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டது

ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி வைப்போம் - ராகுல் காந்தி

5:23 PM, 22 Jul

மேட்டூர் அணை நீர் மட்டம் 120 அடியை எட்டியது
3:39 PM, 22 Jul

மேட்டூருக்கு சுற்றுலா வரும் பயணிகள் காவிரி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது- சேலம் ஆட்சியர்
3:39 PM, 22 Jul

ரெட்டியூரில் மீட்பு பணிகளை பார்வையிட்ட ரோகிணி பேட்டி

காவிரி ஆற்றின் அருகே நின்று செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுக்கக் கூடாது

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டவுள்ள நிலையில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை

அணையிலிருந்து தற்போது 20,000 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது

இரவு 8 மணியளவில் இது 30,000 ஆயிரம் கனஅடியாக உயரும்

கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

வெள்ள அபாயம் தொடர்பான உதவிக்கு 1077 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும்

3:32 PM, 22 Jul

காவிரி வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட மேலும் இருவரின் உடல் சடலமாக மீட்பு

மேட்டூர் அருகே ரெட்டியூரில் வெள்ளத்தில் 5 பேர் அடித்து செல்லப்பட்டனர்

மொத்தம் 4 பேரின் உடல் சடலமாக மீட்பு

2:54 PM, 22 Jul

வேலூரில் சிஎஸ்ஐ தேவாலயத்தில் கைத் துப்பாக்கியுடன் இருந்த 5 பேர் கைது

ஆலய வளாகத்துக்குள் வெட்டுக் கத்தி, ஆயுதங்களுடன் வந்த 5 பேரிடம் விசாரணை

ஜான், வேதானந்தன், தேவா, மற்றொரு வேதானந்தன், அன்பு கிராண்ட் ஆகியோர் பிடிபட்டனர்

தலைமை ஆயர் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்தது

2:28 PM, 22 Jul

ரெட்டியூரில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட இருவர் சடலமாக மீட்பு

மேட்டூர் அருகே ரெட்டியூரில் காவிரி வெள்ளத்தில் 5 பேர் அடித்து செல்லப்பட்டனர்

வாணிஸ்ரீ , மைதிலி ஆகியோரின் உடல்கள் மீட்பு

11:39 AM, 22 Jul

அரசியலுக்கு வந்திருந்தால் நான் முதல்வராகியிருப்பேன்- பாரதிராஜா

இயக்குநர் பாலசந்தரக்கு சென்னையில் சிலை வைக்க வேண்டும்

அரசியல் கட்சியிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது

பெரிய பதவி தருவதாகவும் வாக்களித்தனர்

ஆனால் எனக்கு அதில் விருப்பம் இல்லை என்று சொல்லி மறுத்துவிட்டேன்

நயன்தாரா திறமையாக தனது நடிப்பை வெளிப்படுத்துகிறார்- பாரதிராஜா

11:33 AM, 22 Jul

டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீர் திறப்பு

கல்லணையில் இருந்து விநாடிக்கு 17,000 கன அடி நீர் திறப்பு

அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ். மணியன், வெல்லமண்டி நடராஜன்,

வளர்மதி ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர்

9:19 AM, 22 Jul

மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியை எட்டியது

கர்நாடகாவில் இருந்து 67,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது

மேட்டூரில் இருந்து 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது

மேட்டூரின் முழு கொள்ளளவு 120 அடி ஆகும்

9:18 AM, 22 Jul

காஷ்மீரில் ராணுவத்தினர் தீவிரவாதிகள் இடையே மோதல்

குல்ஹாம் பகுதியில் நடந்த மோதலில் 3 தீவிரவாதிகள் பலி

மோசமான தாக்குதலில் 2 ராணுவத்தினர் காயம்

காவலர் முகமது சலீமை கடத்திக் கொலை செய்த 3 பேரும் சுட்டுக்கொலை

9:17 AM, 22 Jul

சேலத்தில் இன்று காலை 7.55 மணியளவில் நில அதிர்வு

ஓமலூர், மேச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலஅதிர்வு

பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர்

சில வினாடிகள் நீடித்த நிலஅதிர்வால் வீடுகளில் விரிசல்

English summary
Mild earthquake shakes Salem
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X