For Daily Alerts
Just In
பாடம் சந்தேகம் கேட்ட மாணவி... பாலியல் தொந்தரவு தந்த பேராசிரியர் கைது
சேலம்: சேலத்தில்,மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கல்லூரி விரிவுரையாளரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீஸார் கூறும்போது, "சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் பொறியியற் கல்லூரி மாணவிக்கு அதே கல்லூரியை சேர்ந்த விரிவுரையாளர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
பாடத்தில் சந்தேகம் கேட்ட மாணவியை (வயது 17) வீட்டுக்கு வந்து சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். மாணவியும், விரிவுரையாளரின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அங்கு அவரை பாலியல் துன்புறுத்தலுக்கு விரிவுரையாளர் ஆளாக்கியுள்ளார். சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ளோம். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றனர்.
Comments
English summary
A college professor was arrested in Salem for molesting a girl student.
Story first published: Saturday, April 4, 2015, 15:31 [IST]