For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கல்லூரி மாணவி துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை... மரணத்திற்கு காரணம் என்ன? போலீசார் தீவிர விசாரணை

சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் மரணத்திற்கான காரணங்கள் என்ன என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை தனியார் கல்லூரி மாணவியில் படித்து வந்த மாணவி ஷைனி சரண்பிரியா தற்கொலை செய்து கொண்டது ராயபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராயபுரம் உசேன் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் ஜெரோன். இவருக்கு 21 வயதில் ஷைனி சரண்பிரியா என்ற மகள் இருந்தார். ஷைனி சரண்பிரியா சைதாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி படித்து வந்தார்.

College student commits suicide by hanging

கடந்த புதன்கிழமை ஷைனி சரண்பிரியா வழக்கம் காலையில் கல்லூரிக்கு சென்று மாலை வீட்டிற்கு திரும்பி வந்தார். வீட்டில் யாருடன் சரியாக பேசாமல் அமைதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தனி அறையில் அவர் தூங்க சென்றுவிட்டார்.

மறுநாள் காலை விடிந்து நீண்ட நேரமாக அவர் வெளியே வரவில்லை. அசந்து மகள் தூங்கிக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்த பெற்றோர், கதவை தட்டி பார்த்துள்ளனர். அப்போது ஷைனி கதவைத் திறக்காததால் அதிர்ச்சியடைந்தனர். பயந்து போன அவர்கள், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது, ஷைனி சரண்பிரியா தனது துப்பட்டாவில் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணத்தை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

English summary
A private college student committed suicide by hanging at Rayapuram in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X