பாலியல் புகாருக்குள்ளான கோவை கல்லூரி சேர்மனை கைது செய்க.. மாணவர்கள் கொந்தளிப்பு!
Recommended Video
கோவை: பாலியல் புகாருக்குள்ளான கோவை கல்லூரி நிர்வாக இயக்குநரை கைது செய்ய கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
கோவையில் உள்ள எஸ்என்எஸ் கல்லூரியின் நிர்வாக இயக்குநராக உள்ளவர் சுப்பிரமணியன் (64). இவர் 23 வயது இளம் பெண் ஒருவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு தெரியாமல் அந்த பெண்ணே ரகசியமாக கேமராவை வைத்து அந்த வீடியோ ஆதாரத்துடன் சுப்பிரமணியன் மீது துடியலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
The college student protest demanding action against the Chairman. Cops once again say that they’ll act only after a complaint is filed. pic.twitter.com/kTwlxGbGnA
— Pramod Madhav (@madhavpramod1) September 20, 2018
அந்த பெண்ணை ஓடி பிடித்து சுப்பிரமணி சில்மிஷம் செய்யும் வீடியோ வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சுப்பிரமணியத்தை கைது செய்ய கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.