குற்றாலம்: தீயணைப்பு கமாண்டோக்கள் பேரிடர் மீட்பு ஒத்திகை
குற்றாலம்: குற்றாலத்தில் தீயணைப்பு மீட்பு படையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
தீயணைப்பு துறை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் தீயணைப்பு துறையினருக்கு பல நவீன உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இதில் அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் சிலரை மட்டும் தேர்வு செய்து அவர்களுக்கு முறையாக பயிற்சி கொடுத்து கமாண்டோ வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்கள், விபத்தில் சிக்கியவர்கள், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்கள் போன்றோர்களை மீட்கும் பணியில் முக்கிய பங்கு வகிப்பர்.
குற்றாலம் மலைப்பகுதியாக இருப்பதாலும், அடிக்கடி வெள்ளம் ஏற்படும் இடமாக இருப்பதாலும், வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி மீட்பது, மலைப்பாதைகளில் பயணம் செய்யும் போது விபத்தில் சிக்கி கொண்டவர்களை மீட்பது எப்படி என பொதுமக்களுக்கு செய்து காண்பிக்கும் விதமாக இன்று குற்றாலத்தில் கமாண்டோ வீரர்களின் பேரிடர் மீட்பு நிகழ்ச்சி நடத்துக்கின்றனர்.
இதற்காக நேற்று குற்றாலத்தில் பிரதான அருவி மலைப்பகுதியில் கயிறு மூலம் இறங்கி ஒத்திகையில் ஈடுபட்டனர். இன்றும் இப்பயிற்சி நடைபெறுகிறது. இந்த பயிற்சியினை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.