For Daily Alerts
Just In
எட்டு வழிச்சாலை: விவசாயிகளின் ஒப்புதலுடன் விளைநிலங்களில் அளவீடு- சேலம் ஆட்சியர் ரோகிணி
எட்டு வழிச்சாலை தொடர்பாக சேலம் ஆட்சியர் ரோகிணி விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
விவசாயிகளின் ஒப்புதலுடன் விளைநிலங்களில் அளவீடு- சேலம் ஆட்சியர்-வீடியோ
சேலம்: எட்டு வழிச்சாலைக்காக விவசாயிகளின் ஒப்புதலுடனேயே விளைநிலங்கள் அளவீடு செய்யப்படுவதாக சேலம் ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் ஆட்சியர் ரோகிணி கூறிய கருத்துகள்:
- மக்களுக்கான சாலை என்பதால் 8 வழி சாலைக்கு கருத்து கேட்பு கூட்டங்கள் தேவை இல்லை
- எட்டு வழிச்சாலைக்கான நிலம் விவசாயிகளின் ஒப்புதலுடனேயே அளவீடு செய்யப்படுகிறது.
- சேலம் மாவட்டத்தில் 853 மூலப் பட்டாதாரர்களின் நிலம் கையடுக்கப்படுத்தப்படுகிறது.
- விவசாயிகளுக்கு 3 மடங்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படும்
- 1 ஹெக்டேருக்கு ரூ21.5 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ9.04 கோடி வரை இழப்பீடு வழங்கப்படும்
- கிராமங்களில் கோயில்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- பயன்தரும் ஒரு தென்னை மரத்திற்கு ரூ50,000 இழப்பீடு
- மாட்டுக் கொட்டகை, பெட்டி கடைகளை இடம் மாற்றம் செய்ய ரூ50,000 இழப்பீடு
- நிலம் வழங்குவோருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கவும் ஏற்பாடு
- பசுமை வீடு, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்
- இளைஞர்கள் சுய தொழில் தொடங்க மானியத்துடன் கடன்கள் வழங்கப்படும்.
இவ்வாறு ஆட்சியர் ரோகிணி தெரிவித்தார்.
Comments
English summary
Salem Collector Rohini said that, we are taking all steps to compensate farmers for expressway project.