பெண் செய்தியாளரின் கன்னத்தை தட்டிய விவகாரம்.. தமிழக ஆளுநர் மீது சென்னை கமிஷனரிடம் புகார்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் பெயர் இடம் பெற்றது.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து ஆளுநர் பன்வாரிலால் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பெண் நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்காமல் அவரது கன்னத்தை தட்டிக்கொடுத்தார்.
இந்த விவகாரம் பூதாகரமானது. இதைத்தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அந்த பெண் நிருபரிடம் நேற்று மன்னிப்பு கோரினார். பெண் நிருபரை பேத்தியாக நினைத்துதான் கன்னத்தில் தட்டியதாக கூறினார்.
இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது சட்டக்கல்லூரி மாணவி நந்தினி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். பெண் செய்தியாளரை கன்னத்தில் தொட்ட விவகாரத்தில் ஆளுநர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சட்டக்கல்லூரி மாணவி நந்தினி தனது புகாரில் வலியுறுத்தியுள்ளார்.