‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ பாடலுக்கு எதிர்ப்பு.. சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்!
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இடம்பெற்றுள்ள சொடக்கு மேல சொடக்கு பாடலுக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இடம்பெற்றுள்ள சொடக்கு மேல சொடக்கு பாடலுக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள 'சொடக்கு மேல சொடக்கு போடுது' பாடல் அண்மையில் வெளியானது.
இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைதுள்ளது. இந்நிலையில் சொடக்கு மேல சொடக்கு பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி சதீஷ்குமார் என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சொடக்கு மேல சொடக்கு போடுது பாடல் அரசியல்வாதிகளை கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பாடலாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.