For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெல்லை மாவட்ட காங். அலுவலகத்திற்குப் பூட்டுப் போட்ட வாசன் ஆதரவாளர்கள் - பூட்டை உடைத்த காங்கிரஸார்!

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தைக் கைப்பற்றும் ஜி.கே.வாசன் ஆதரவாளர்களின் முயற்சியை, காங்கிரஸார் முறியடித்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த ஞானதேசிகன், கடந்த 30-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசனும் இந்த முடிவை வரவேற்றார். இதையடுத்து, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நியமிக்கப்பட்டர்ர்.

Congress cadres thwart Vasan supporters attempt to capture office

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட மோதலையடுத்து, தன் ஆதரவாளர்களுடன் காங்கிரசுக்கு விடை கொடுத்துவிட்டு நேற்று தனிக் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார் ஜி.கே.வாசன்.

இந்நிலையில் நெல்லை மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை கைப்பற்றும் வகையில் வாசன் ஆதரவாளர்கள் பூட்டு போட்டு பூட்டினர். இதைத் தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் காங்கிரஸ் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகம் முன்பாக திரண்டனர்.

அவர்கள் வாசனுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அதன் பின்னர் தொடர்ந்து காங்கிரஸ் அலுவலகத்திற்குப் போடப்ப்ட பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கே இருந்த பீட்டர் அல்போன்ஸ் போட்டோவை உடைத்து வெளியே கொண்டு வந்து தீ வைத்து எரித்தனர். பின்னர் ஜி.கே.வாசனுக்கு எதிராக கோஷம் கோஷம் போட்டனர். இதனால் பரபரப்பு ஏற்ப்பட்டது

English summary
Nellai Congress cadres thwarted G K Vasan supporters's attempt to capture party office.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X