ரகசிய வாக்கெடுப்பே சிறந்தது.. காங்கிரஸ் எம்எல்ஏ ராமசாமி கோரிக்கை
ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சட்டசபைக் குழு தலைவர் ராமசாமி சட்டசபையில் கோரியுள்ளார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று சட்டசபையில் கோரியுள்ளது.
கடும் கூச்சல் குழப்பத்திற்கு கிடையே சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஓபிஎஸ், செம்மலை உள்ளிட்டவர்கள் பேசினார்கள். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் சட்டசபைத் தலைவர் ராமசாமி பேசினார்.
அப்போது, ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஏற்கனவே மு.க. ஸ்டாலின், ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியும் அதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது.
ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரி தொடர் அமளியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டதால் சட்டசபை மதியம் 1 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் அவையில் இருந்து வெளியேறினார்.