For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒவ்வொரு பெட்ரோல் பங்க்கிலும் மோடி.. ஜோதிமணி பொளேர்!

Google Oneindia Tamil News

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு நாளுக்கு நாள் மிருகத்தனமாக உயர்ந்து வருகிறது. மக்களைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் இஷ்டத்திற்கு ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜெனரல் டயர் ஜாலியன்வாலாபாக்கில் எதிரில் கண்டவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளியது போல இஷ்டத்திற்கு ஏறிக் கொண்டிருக்கிறது விலை. எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் கவலைப்படாமல் போய்க் கொண்டே இருக்கிறார்கள்.

Congress leader slams Modi for Petro products price rise

மக்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எங்கே போய் முட்டிக் கொள்வது என்றும் புரியவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் மக்கள் தகித்துப் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களை தகித்துக் கொண்டிருந்தாலும் அதை பாஜகவினர் முட்டுக்கொடுக்கத் தவறவில்லை. தொடர்ந்து நியாயப்படுத்தியே பேசி வருகிறார்கள். அதை விட தப்புத் தப்பாக கிராப் போட்டுக் காட்டி மக்களிடம் மேலும் மேலும் வெறுப்புகளை வாரிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி பிரமுகர் ஜோதிமணி போட்டுள்ள டிவீட்டில் பிரதமர் மோடியை சாடியுள்ளார். அந்த டிவீட்டில், தமிழகத்தில் மோடி மீது பொங்கும் அதீத கோபம் நியாயமானதே. பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்திலும் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் மோடி நம்மை உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார் ஜோதிமணி.

மறுபக்கம் அடுத்த 50 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சிதான், அதை அசைக்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

English summary
Youth Congress leader Jothimani has slammed PM Modi for Petro products price rise in the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X