For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சேலையை பிடித்து இழுத்து.. அநாகரீகமாக சட்டசபையிலிருந்து வெளியேற்றினர்.. விஜயதாரணி பரபர குற்றச்சாட்டு!

சபை காவலர்கள் தன்னை சேலையை பிடித்து இழுத்து அநாகரீகமான முறையில் காயப்படுத்தி சட்டசபையில் இருந்து வெளியேற்றினார்கள் என விஜயதாரணி குற்றம்சாட்டியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    விஜயதாரணி பரபர குற்றச்சாட்டு!-வீடியோ

    சென்னை: சபை காவலர்கள் தன்னை சேலையை பிடித்து இழுத்து அநாகரீகமான முறையில் காயப்படுத்தி சட்டசபையில் இருந்து வெளியேற்றினார்கள் என விஜயதாரணி குற்றம்சாட்டியுள்ளார்.

    சட்டசபையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பேச சபாநாயகரிடம் அனுமதி கேட்டார்.

    அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்ததால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து விஜயதாரணி சபாநாயகருடன் மோதலில் ஈடுபட்டதால் அவரை வெளியேற்ற சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

    அழைத்து செல்ல முயற்சி

    அழைத்து செல்ல முயற்சி

    இதைத்தொடர்ந்து பெண் காவலர்கள் உள்ளே வந்து விஜயதாரணியை கையைப் பிடித்து வெளியே அழைத்துச் செல்ல முயன்றனர்.

    என்னை தொடாதீர்கள்

    என்னை தொடாதீர்கள்

    அவர்களைப் பார்த்து விஜயதாரணி, ‘‘என்னை தொடாதீர்கள்'' என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆவேசமாக கூறினார். தொடர்ந்து அவர் வெளியேற மறுத்ததால் வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள்.

    விஜயதாரணி பேட்டி

    விஜயதாரணி பேட்டி

    இதைத்தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் விஜயதாரணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, சட்டசபையில் கன்னியாகுமரி மாவட்ட பிரச்சனை குறித்து பேச அனுமதி கேட்டேன்.

    அனுமதி மறுப்பு

    அனுமதி மறுப்பு

    நேற்றும் இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். ஆனால் எனக்கு பேச சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். தொடர்ந்து நான் வற்புறுத்தியதால் சபை காவலர்களை கொண்டு வெளியேற்றினார்.

    சேலையை பிடித்து இழுத்து

    சேலையை பிடித்து இழுத்து

    சபை காவலர்கள் என்னை அநாகரீகமான முறையில் காயப்படுத்தி வெளியேற்றினார்கள். சேலையைப் பிடித்தும், கையைப் பிடித்து இழுத்தும் வயிற்றை, நெஞ்சை அமுக்கியும் வெளியேற்றினார்கள்.

    சபாநாயகர் அநாரீகம்

    சபாநாயகர் அநாரீகம்

    சட்டசபையில் சபாநாயகரும் அநாகரீகமான முறையில் பேசினார். இவ்வாறு விஜயதாரணி செய்தியாளர்களிடம் பேசினார்.

    English summary
    Congress MLA Vijayadharani accussed the speaker Dhanapal. Vijayadharani sacked from Assembly by the securities.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X