தமிழ்நாட்டின் சொத்து என்ற வைகோ.. கண்கலங்கிய குமரி அனந்தன்.. மருத்துவமனையில் நெகிழ்ச்சி!
Recommended Video
சென்னை: ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குமரி அனந்தனை அவரது தோழர்கள் நல்லக்கண்ணு, வைகோ, முத்தரசன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர்.
சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குமரி அனந்தனை அவரது தோழர்கள் நல்லக்கண்ணு, வைகோ, முத்தரசன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலக்கியச் செல்வர் என அழைக்கப்படும் அவரை தோழர்கள் ஆர்.நல்லக்கண்ணு, வைகோ, முத்தரசன், ஏழுமலை, நடிகர் கே.ராஜன், மூத்த பத்திரிகையாளர் ஜெயமணி ஆகியோர் நேரில் சந்தித்த நலம் விசாரித்தனர்.
இதைத்தொடர்ந்து மருத்துவ குழுவிடம் பேசிய வைகோ, இவரை பத்திரமாக கவனித்துக் கொள்ளுங்கள், இவர் தமிழ்நாட்டின் சொத்து என்றார். இதனைக்கேட்ட குமரி அனந்தன் நெகிழ்ச்சியில் கண் கலங்கினார்.