For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்சி வந்தார் ராகுல்காந்தி… காமராஜர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருச்சி: காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி திருச்சி வந்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் இன்று மாலை காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று சிறப்புரையாற்றினார் ராகுல்காந்தி.

ஏராளமான காங்கிரஸ் தொண்டர் பங்கேற்ற பிரமாண்டமான கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, விவசாயிகளையும் சந்தித்து உரையாடினார்.

திருச்சி வந்தார் ராகுல்

திருச்சி வந்தார் ராகுல்

பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று பிற்பகலில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு

பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு

குண்டு துளைக்காத கார் மூலம் பொன்மலை ஜி கார்னர் மைதானத்திற்கு வந்த ராகுல்காந்தி கொட்டும் மழையில் உற்சாகமாக உரையாற்றினார். பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.ராகுல்காந்தி திருச்சி வருகையையொட்டி பாதுகாப்புக்காக டெல்லியில் இருந்து மத்திய சிறப்பு பாதுகாப்பு படை உதவி ஐஜி ராவத் தலைமையிலான 16 அதிகாரிகள் திருச்சியில் முகாமிட்டுருந்தனர்.

2500 போலீசார்

2500 போலீசார்

திருச்சி ஏர்போர்ட் முதல் விழா நடை பெறும் பொன்மலை ஜிகார்னர் வரை மத்திய சிறப்பு பாதுகாப்பு படை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. 2500 போதிருச்சி ஏர்போர்ட் முதல் விழா நடைபெறும் பொன்மலை ஜிகார்னர் வரை மத்திய சிறப்பு பாதுகாப்பு படை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்காக திருச்சி மண்டலத்தில் இருந்து மட்டுமல்லாமல் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.லீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்காக திருச்சி மண்டலத்தில் இருந்து மட்டுமல்லாமல் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகளுடன் சந்திப்பு

விவசாயிகளுடன் சந்திப்பு

பொதுக்கூட்டத்துக்கு பின் விமான நிலையம் எதிரே ஜே.கே.நகருக்கு செல்லும் பாதையில் லூர்து நகரில் உள்ள பண்ணை இல்லத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 200 பேரை ராகுல்காந்தி சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார் ராகுல்காந்தி

English summary
Congress Vice President Rahul Gandhi arrived Tirchy today, he will address a meeting with the public to mark the occasion of K Kamaraj’s, party icon, birth anniversary celebrations. He will also interact with the farmers as a part of nation-wide campaign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X