For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் கன மழை.. வடபழனி அருகே சுவர் இடிந்து 8 பேர் படுகாயம்

Google Oneindia Tamil News

சென்னை : தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், கட்டடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் படுகாயமடைந்தனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 வது நாளாக கன மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

rain

இந்நிலையில், வடபழனி ஏ.வி.எம். ஸ்டுடியோ அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டடத்தின் சுவர் மழையால் பாதிக்கப்பட்டு இடிந்து விழுந்தது. இதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர்,
படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுவர் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கபட்டது.

English summary
Continuous rain Chennai private building wall damaged and broken. 8 Injured
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X