தமிழக காங். மாணவர் பிரிவு தலைவராக தாதா நாகேந்திரன் மகன் அஸ்வத்தம்மன் நியமனம்!
தமிழக காங்கிரஸின் மாணவர் பிரிவு தலைவர் பதவி தாதா நாகேந்திரன் மகனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழக காங்கிரஸின் மாணவர் பிரிவு தலைவராக தாதா நாகேந்திரன் மகன் அஸ்வத்தமன் நியமிக்கப்பட்டுள்ளது சர்ச்சையாக வெடித்துள்ளது.
சென்னையை கலக்கி வரும் தாதா நாகேந்திரனின் மகன் அஸ்வத்தம்மனுக்கு திடீரென தமிழக காங்கிரஸின் மாணவர் பிரிவு தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரசில் ஒரு வட்டத் தலைவர் பதவியில் கூட இல்லாத அஸ்வத்தம்மன் இப்போது மாணவர் பிரிவு தலைவராகி இருக்கிறார்.
தற்போது அஸ்வத்தம்மனின் குடும்ப க்ரைம் ரெக்கார்டுகள் குறித்த பல்வேறு குற்றச்சாட்டுகள் டெல்லிக்குப் பறந்துள்ளன. இதனால் மாணவர் பிரிவு தலைவராக அஸ்வத்தம்மன் பதவி ஏற்பதை மூத்த தலைவர்கள் புறக்கணித்துள்ளனர்.
அதே நேரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரது அதிதீவிர ஆதரவாளர்தான் இந்த பதவியை வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாஜி மத்திய அமைச்சர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.