For Daily Alerts
Just In
எட்டு வயதே ஆன சிறுமிக்கு பாலியல் தொல்லை – கூலித் தொழிலாளி போலீசாரால் கைது!
தேனி: தேனி மாவட்டம், போடியில் 8 வயதான சிறுமி ஒருவரை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய தொழிலாளி ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
போடி அருகே திம்மிநாயக்கன்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவரது 8 வயது மகள் வெள்ளிக்கிழமை வீட்டருகே நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது இதே தெருவில் வசிக்கும் சுப்பிரமணி மகன் கூலித்தொழிலாளி தங்கையா, என்பவர் சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
சிறுமியின் சத்தம் கேட்டு வந்த அப்பகுதியிலிருந்தவர்கள் தங்கையாவை போடி புறநகர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போடி புறநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிலிப் கென்னடி மற்றும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தங்கையாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English summary
Man misbehaved to an eight years old girl in bodi, Theni district. Police arrested him and filed case about this incident.
Story first published: Saturday, November 1, 2014, 16:59 [IST]