ஆர்கே நகரில் குவியும் வெளியூர் ஆட்கள்... இருமடங்காக உயரும் உணவுப் பொருட்கள்!
சென்னை ஆர்கே நகர் தொகுதியில், இடைதேர்தலையொட்டி வெளியூர் ஆட்கள் அதிகளவில் வந்து குவிந்துள்ளதால், ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை இருமடங்காகக் குவிந்துள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை: ஆர்கே நகரில் இடைதேர்தல் நடக்கவுள்ளதால் அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வெளியூர்களில் இருந்து ஆட்கள் அதிகமாக வந்திருப்பதால், ஆர்கே நகர் ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை இருமடங்காகக் கூடிவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆர்கே நகரில் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி இடைதேர்தல் நடக்கவுள்ளது. இதில் போட்டியிடும் பிரதான கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்கு வெளியூரில் இருந்து பல ஆயிரம் பேர் ஆர்கே நகர் வந்துள்ளனர்.
இவர்கள் நாள் முழுவதும் ஆர்கே நகரையே சுற்றி வருகின்றனர். மேலும், இவர்கள் அனைவருமே உணவுக்கு ஆர்கே நகர் ஹோட்டல்களைத்தான் நாடுகின்றனர்.
இந்த திடீர் கூட்டத்தால் ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை இருமடங்காக உயர்ந்துவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.