சிவகாசி அருகே... கண்மாயில் குவியல் குவியலாக நாட்டு வெடிகுண்டுகள்!
சிவகாசி: சிவகாசி அருகே கண்மாயில் குவியல் குவியலாக நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் கிராமத்தில் உள்ள கண்மாய் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கிராமத்தினர் இது தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார், நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். ஈஞ்சார் கிராமத்தில் நாட்டு வெடிகுண்டுகள் கிடந்தது குறித்து வருவாய் அலுவலா்களும் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் அதிகம் காணப்படுகின்றன. தீபாவளி பண்டிகை, திருவிழாக்களுக்குத் தேவையான பட்டாசுகள்தான் அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தநிலையில் கண்மாய் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.