கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி ஜாமின் மனு தள்ளுபடி
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியின் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Recommended Video
கோவை : பேராசிரியர் பணி நியமனத்திற்கு லஞ்சம் வாங்கியதாகக் கைது செய்யப்பட்ட கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி சில தினங்களுக்கு முன் தனது வீட்டில் வைத்து ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்டார். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் மேலும் பலர் சம்பந்தப்பட்டு இருப்பதாக தெரியவந்ததை அடுத்து போலீஸார் தங்களது விசாரணை வளையத்தின் கீழ் அனைவரையும் கொண்டு வந்துள்ளனர். துணைவேந்தருக்கு உதவியாக இருந்த பேராசிரியர் மற்றும் துணைவேந்தரின் மனைவி ஆகியோரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் ஜாமின் கேட்டு கோவை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், அவர்களுக்கு ஜாமின் வழங்க தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து இரு தரப்பு வழக்கறிஞர்களும் காரசார வாதம் நடந்தது. இதனையடுத்து, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜான் வினோ உத்தரவிட்டார்.