குற்றாலத்தில் கோலாகல வெள்ளம்... அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு
குற்றாலம்: நெல்லை மாவட்டத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர் வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இம்மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அருவிகளிலும் செம்மண் கலரில் தண்ணீர் கொட்டிவருவதால் வெள்ளம் தொடர்ந்து நீடிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் மலைப் பகுதிகளில் பலத்த மலாய் பெய்து வருவதால் வறண்ட ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
செங்கோட்டை குண்டாறு நீர்தேக்கம், மேக்கரை அடவி நைனார் கோவில் நீர்தேக்கம், கருப்பாநதி நீர்தேக்கம் உள்ளிட்ட அனைத்து நீர்தேக்கங்களுக்கும் காட்டாற்று வெள்ளம் வருவதால் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
இன்றைய காலை நிலவரப்படி குண்டாறு நீர்தேக்கம் இன்று மதியத்திற்குள் நிரம்பி வழியும் என்று கூறப்படுகிறது. மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.