திரிபுராவில் பாஜகவிற்கு வெற்றியல்ல வாரி இறைத்த பணத்திற்கு தான் வெற்றி... பாலகிருஷ்ணன்!
திரிபுராவில் பாஜகவிற்கு வெற்றியில்லை என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video
சென்னை : திரிபுராவில் பாஜக கூட்டணிக்கு கிடைத்திருக்கும் வெற்றி அவர்களுக்கான வெற்றியல்ல அவர்கள் வாரி இறைத்திருக்கும் பணத்திற்கு கிடைத்த வெற்றி என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
திரிபுரா மாநிலத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தேர்தல் முடிவுகள் கருத்துகணிப்புகளை உண்மையாக்கியுள்ளன. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பாஜக கூட்டணி 40 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்றதால் ஆட்சியை பிடிப்பது உறுதியாகியுள்ளது. பாஜகவின் இந்த வெற்றியை தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்திருப்பது இடதுசாரி அமைப்புகளுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. தேர்தல் தோல்வி குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மத்திய அமைச்சரவை முழுவதுமே திரிபுராவில் முகாமிட்டு தேர்தல் வேலை செய்ததாக தெரிவித்தார்.
பல நூறு கோடி ரூபாயை கொட்டி பாஜக திரிபுராவில் வெற்றி பெற்றுள்ளது. இது பாஜகவிற்கு கிடைத்த வெற்றியல்ல பணத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.