அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் மோதியஇந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. !
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி-க்கும் இந்திய கம்யூனிஸ்ட்எம்.எல்.ஏ.-வுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் உதவித் தொகை வழங்கும் விழா, கலெக்டர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில், அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு திருமண உதவிகளை வழங்கினர்.
இந்த விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. பொன்னுப்பாண்டியன் பேச அழைக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அவர், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிடம், என்னை விழாவில் கலந்து கொள்ள செய்து விட்டு, ஏன் பேச அனுமதிக்கவில்லை என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதை சற்றும் எதிர்பாரத அமைச்சர் ராஜேந்திர பாலாஜி , எம்.எல்.ஏ. பொன்னுபாண்டியனை சமாதானம் செய்து அனுப்பிவைத்தார். இதனால் விழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.