மின்வெட்டு: அதிமுக -திமுக மீது மார்க்சிஸ்ட் கட்சி புகார்
தஞ்சாவூர்: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டுக்கு அ.தி.மு.க, தி.மு.க அரசுகளே காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் மின்வெட்டு முக்கிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. முந்தைய திமுக அரசு உரிய மின் திட்டங்களை செயல்படுத்தவில்லை என்று அதிமுக குறைகூறி வருகிறது.
ஆனால் திமுக தரப்பிலொ என்னென்ன திட்டங்கள் தங்களது ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது.. என்று பட்டியலிட்டு வருகிறது.
இந்நிலையில் தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜி. ராமகிருஷ்ணன், மின் உற்பத்திக்கு தேவையான நடவடிக்கையை இரண்டு கட்சிகளும் எடுக்கவில்லை என்று கூறினார்.
பின்னர் திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், எந்த ஒரு கட்சியும் பொருளாதார ரீதியாக எந்த முன்னேற்றம் குறித்தும் பேசவில்லை. தமிழ்நாட்டில் சிறு, குறு விவசாயிகள் மின்சார தட்டுப்பாட்டினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கிய நிலையில் உள்ளோம்.
இந்த நாட்டுக்கு மாற்று தலைவர் தேவை இல்லை. மாற்று கொள்கைதான் வேண்டும் என்றார்.