For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சேலம் 8 வழி சாலைக்கு எதிராக போராட்டம்.. மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. தில்லிபாபு கைது

சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக செங்கம் அருகே மண்மலையில் போராட்டம் நடத்திய போது மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. தில்லிபாபு கைது செய்யப்பட்டுள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக செங்கம் அருகே மண்மலையில் போராட்டம் நடத்திய போது மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. தில்லிபாபு கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். நாளுக்கு நாள் போராட்டம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தமிழக அரசு இவர்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

CPM leader Dhillibabu arrested for protesting against Salem- Chennai 8 way Project

பல போராட்டக்காரர்களை, போராட்டத்தை முன்னெடுக்கும் சமூக போராளிகளை போலீஸ் முன்னெச்சரிக்கையாக கைது செய்து சிறையில் அடைந்துள்ளது. அதேபோல் திமுக நிர்வாகிகள் சிலரையும் போலீஸ் கைது செய்துள்ளது.

அந்த வகையில் தற்போது 8 வழி சாலைக்கு எதிராக போராட்டம் செய்ததால் முன்னாள் எம்.எல்.ஏ. தில்லிபாபு கைது செய்யபட்டுள்ளார். 8 வழிச்சாலைக்கு எதிராக செங்கம் அருகே மண்மலையில் போராட்டம் நடத்திய போது மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. தில்லிபாபு கைது செய்யப்பட்டார்.

இவருடன் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த இன்னும் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
CPM leader Dhillibabu arrested for protesting against Salem- Chennai 8 way Project.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X