"துரோகம் வென்றதாக வரலாறு இல்லை.. ஃபேஸ்புக்கில் ஜெயலலிதாவுக்கு சாபம் விடும் சிபிஎம் பாலபாரதி!
திண்டுக்கல் சட்டசபை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பாலபாரதி. ஃபேஸ்புக்கில் அதிகம் தலைகாட்டக் கூடிய எம்.எல்.ஏக்களில் இவரும் ஒருவர்.
உண்மை இப்படித்தான் இருக்குமா
தற்போது- அதிமுக இடதுசாரிகள் உறவு முறிந்துள்ள நிலையில் அவர் தமது ஃபேஸ்புக்கில் நேற்று "உண்மை இப்படிதான் இருக்குமா" என்று நொந்து போய் பதிவிட்டிருக்கிறார்.
துரோகம் வென்றதாக வரலாறு இல்லை
அதைத் தொடர்ந்து "துரோகம் வென்றதாக வரலாறு இல்லை" என்று ஒரு ஸ்டேட்டஸ் போட்டுவிட்டிருக்கிறார்
மன்னராட்சி வராது
இன்று காலையோ, உங்கள் கனவு நனவாகலாம்! நீங்களே வல்லவராகளாம்! ஆனால் மீண்டும் மன்னராட்சி வராது ! என்று சாடியிருக்கிறார்.
ஜெ. நிலை குறித்து
என்னதான் பாலபாரதி எம்.எல்.ஏ. மறைமுகமாக குறிப்பிட்டிருந்தாலும் அவர் விமர்சிப்பது ஜெயலலிதாவையும் அதிமுகவையும்தான் என்பது அனைவரும் அறிவர். அவரது பதிவுகளில் இது குறித்து நடைபெறும் விவாதங்களையும் கருத்துகளையும் அமைதியாகவே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் பாலபாரதி.
வடை போச்சே
பாலபாரதி எம்.எல்.ஏ.வுக்கு பதிலாக நாம் இப்படி ஸ்டேட்டஸ் போடலாம் "வடை போச்சே..."