For Quick Alerts
For Daily Alerts
Just In
எங்களுக்கு 15 எம்எல்ஏக்கள் கிடைச்சிருப்பாங்க. ஜி.ராமகிருஷ்ணன் புலம்பல்!
திருப்பூர்: தேர்தல்களில் விகிதாசார பிரதிநித்துவம் அமலில் இருந்தால் சட்டசபை தேர்தலில் 6% வாக்குகளைப் பெற்ற மக்கள் நலக் கூட்டணிக்கு 15 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்திருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
திருப்பூரில் நடைபெற்ற இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தம் என்ற கருத்தரங்கில் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:
- லோக்சபா தேர்தலில் பாஜக 31% வாக்குகளை மட்டுமே பெற்று அறுதிப் பெரும்பான்மை இடங்களைப் பெற்றது.
- 69% வாக்குகள் அக்கட்சிக்கு எதிரான வாக்குகளாகும். ஆகையால் பாஜக வெற்றியின் ஜனநாயக உள்ளடக்கத்தை ஏற்க முடியாது.
- 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக பெற்ற வாக்கு 38.4%; கிடைத்தது 150 எம்.எல்.ஏக்கள்.
- திமுக 22.4% வாக்குகளைப் பெற்றது. ஆனால் 23 எம்.எல்.ஏ.க்கள் தான் கிடைத்தனர்.
- அதே நேரத்தில் 7.9% வாக்குகளைப் பெற்ற தேமுதிகவுக்கு 29 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தனர்.
- அரசியல் கட்சிகள் பெறக்கூடிய வாக்குகளுக்கும் அவர்களுக்கு கிடைக்கும் எம்.பி., எம்.எல்.ஏ., இடங்களுக்கும் பொருத்தமில்லாமல் இருக்கின்றன.
- 2016 தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி பெற்ற வாக்கு 6%. ஆனால் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
- விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை இருந்தால் மக்கள் நலக் கூட்டணிக்கு 15 எம்.எல்.ஏக்கள் கிடைத்திருப்பர்.
- பல நாடுகளிலும் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை நடைமுறையில் உள்ளது.
- இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தம் செய்ய வேண்டும். ஏற்கனவே இந்திரஜித் குப்தா குழு பரிந்துரை மத்திய அரசிடம் சமர்ப்பித்தும் 17 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
- சுதர்சன நாச்சியப்பன் குழுவிடமும் தேர்தல் சீர்திருத்தம் குறித்து சில மாதங்களுக்கு முன்பு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
- விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறது.
- தேர்தல்களில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவது தடுக்கப்பட வேண்டும்.
- அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளை அரசே ஏற்பதன் மூலம் பெருவாரியாக வெள்ளமென பணம் செலவிடுவதை தடுக்க முடியும்.
- தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் உள்ளிட்ட அரசமைப்புப் பதவி வகிப்போர், உயர் பதவி வகிக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணி நிறைவுக்குப் பிறகு அரசியலுக்கு வரக்கூடாது.
- தேர்தல் தொடர்பான வழக்குகள், ஒருவரின் பதவிக்காலம் முடிந்த பிறகும், விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
- சிவகங்கை தொகுதியில் 2009 ஆம் ஆண்டு ப.சிதம்பரம் பெற்ற வெற்றி குறித்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால் அவர் அந்த 5 ஆண்டுகாலப் பதவியை முடித்து, தற்போது ராஜ்யசபா எம்.பி.யாகவும் வந்துவிட்டார்.
- ஆகையால் தேர்தல் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்.
Comments
English summary
CPM State Secretary G Ramakrishnan wanted to immediate changes in Present Electoral System.
Story first published: Wednesday, August 31, 2016, 13:09 [IST]