For Quick Alerts
For Daily Alerts
Just In
பலத்த பாதுகாப்புடன் ஹோட்டலின் பின் வாசல் வழியாக மைதானத்திற்கு வந்து சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள்
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேப்பாக்கம் மைதானத்திற்கு கிரிக்கெட் வீரர்கள் வந்தடைந்தனர்.
Recommended Video
ஐபிஎல்-க்கு எதிராக சென்னை அண்ணாசாலையில் பிரமாண்ட புரட்சி- வீடியோ
சென்னை: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேப்பாக்கம் மைதானத்திற்கு கிரிக்கெட் வீரர்கள் வந்தடைந்தனர்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகளும் சென்னை அண்ணாசாலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அண்ணாசாலை முடங்கியது.
போராட்டம் காரணமாக வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்திற்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் சென்னை அடையார் ஹோட்டலில் இருந்து வீரர்கள் மைதானத்திற்கு புறப்பட்டனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே இரண்டு பேருந்துகளில் ஹோட்டலின் பின்புறம் வழியாக வீரர்கள் 5.45 மணிக்கு மைதானத்திற்குள் வந்தடைந்தனர்.
Comments
English summary
Cricket players has reached Chennai Cheppak stadium from Adyar hotel.