For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்டினால் 31.12.2015 வரை செல்லும்: தமிழக அரசு அறிவிப்பு

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: தற்போது பயன்பாட்டில் உள்ள குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டினால் அவை வரும் 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை செல்லுபடியாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளை 2015-ம் ஆண்டிற்கு புதுப்பிக்கும் வகையில் உள்தாள்களை அச்சிட்டு, குடும்ப அட்டையில் இணைத்து, குடும்ப அட்டையின் செல்லத்தக்க காலத்தை 01.01.2015 முதல் 31.12.2015 வரை நீட்டிக்க அரசு ஆணையிட்டுள்ளது என்று உணவுத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலைக் கடைகளுக்கு டிசம்பர் மாதம் அத்தியாவசியப் பொருட்கள் பெறவரும்போது அவர்களுடைய குடும்ப அட்டையில் 2015-ம் ஆண்டிற்கான உள்தாளினை இணைத்து வழங்குமாறும் உத்திரவிடப்பட்டுள்ளது.

எப்பொருளும் வேண்டா குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள் கணினி மூலம் புதுப்பித்துக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பொது விநியோகத் திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கு போதுமான தரமான விலையில்லா அரிசி அனைத்து கிடங்குகளிலும் சுமார் 3 மாத தேவைக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சர்க்கரை, கோதுமை, பாமாயில், பருப்பு வகைகள் உள்ளிட்ட ஏனைய அத்தியாவசியப் பொருள்களும் சீரானமுறையில் விநியோகம் செய்வது உறுதி செய்யப்பட்டு வருகிறது.

பொது விநியோகத் திட்ட கிடங்குகளிலிருந்து நியாயவிலைக் கடைகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் நகர்வு செய்யப்படுவதை கண்காணிக்கவும், கடைகளில் உள்ள பொருள்களின் இருப்பினை அறிந்து அவ்வப்போது தேவையான பொருள்களை நகர்வு செய்யவும், புதிய குடும்ப அட்டைகளை வழங்கவும், போலி குடும்ப அட்டைகளை களையவும், இத்திட்டங்களை கணினி மயமாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
TN government has announced that current ration card will be valid until december 2015.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X