ரூ. 4000த்துக்கு வெறும் ஸ்லிப்... ரூ.2000க்கு 700 கூடுதல்.. குழப்பிய ஏ.டி.எம்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் உள்ள ஏடிஎம்மில் ரூ.2000 பணம் எடுத்தவருக்கு இனாமாக ரூ.700 கிடைத்ததால் அவர் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனார். அதேசமயம் ரூ.4000 கேட்டவருக்கு வெறும் ஸ்லிப் மட்டுமே வந்ததால் அவர் அதிர்ச்சியடைந்ததார்.
நாகர்கோவில் கிறிஸ்வத பெண்கள் கல்லூரி அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் கருவியில் நேற்று பணம் எடுக்க சென்றவர்களுக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் காத்திருந்தது.
ஒருவர் ரூ.4 ஆயிரம் எடுப்பதற்காக ஏடிஎம் கார்டை நுழைத்துள்ளார். அவருக்கு வங்கி செயல்பாடுகள் முடிந்த பின்னர் பணம் எதுவும் வரவில்லை. ஆனால் ரூ.4 ஆயிரம் எடுத்து விட்டதாக ஸ்லிப் வந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வங்கி நிர்வாகத்தை உடனடியாக தொடர்பு கொண்டு விபரங்களை தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர் ஏடிஎம் விரைந்து வந்தார். அப்போது இன்னொருவர் ரூ.2 ஆயிரம் பணம் எடுக்க ரூ.700 அதிகமாக வந்தது. இதனை கண்ட வங்கி மேலாளர் அதிகமாக வந்த ரூ.700ஐ அந்த நபரிடம் இருந்து திரும்ப பெற்றுக் கொண்டார்.
உடனே அங்கிருந்த பொதுமக்கள் பணம் எடுப்பவர்களுக்கு கூடுதல் பணம் வருவதும், சிலருக்கு பணம் வருமாலேயே பணம் எடுத்து விட்டதாக ஸ்லிப் வருவதாகவு்ம் மேலாளரிடம் புகார் தெரிவித்தனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு தொற்றி கொண்டது. சிறிது நேரம் அங்கிருந்து அந்த ஏடிஎம்மின் செயல்பாடுகளை கண்காணித்து வங்கி மேலாளர் பின்னர் ஏடிஎம்மின் அறை ஷட்டரை பூட்டி விட்டு சென்று விட்டார்.