கடலூரில் பயங்கரம்: அண்ணாமலை பல்கலை. விடுதி மாணவி லாவண்யாவின் கழுத்து அறுப்பு- இளைஞர் கைது
மாணவியின் கழுத்தை அறுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்,.
Recommended Video
கடலூர்: பல்கலை. மாணவி ஒருவரின் கழுத்து அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையின் விடுதி மாணவி லாவண்யா. இவர் விடுதியிலிருந்து இன்று காலை வெளியே சென்றதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அங்கு வந்த ஒருவர் லாவண்யாவின் கழுத்தை அறுத்து கொடூர செயலில் ஈடுபட்டார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். கழுத்து அறுபட்டு தப்பிக்க முயன்ற அந்நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கழுத்து அறுபட்டதால் நிலைகுலைந்த லாவண்யா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தாக்குதல் நடத்திய அந்த நபர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.லாவண்யா மீது கொலைவெறித் தாக்குதல் என்ன காரணம்? ஏதேனும் காதல் விவகாரமா இருக்குமா என்பது குறித்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.