For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜபாளையம் காவல்நிலையம் முன் பயங்கரம்.. மனைவியை சரமாரியாக அரிவாளால் வெட்டிய கணவன்.. பரபரப்பு!

குடும்ப தகராறு காரணமாக மனைவியை கணவன் அரிவாளால் வெட்டினார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மனைவியை வெட்டிய கணவன் | மீன் மார்க்கெட்டுக்கு எதிராக போராட்டம்- வீடியோ

    மதுரை: ராஜபாளையத்தில் பொதுமக்கள் முன்னிலையிலேயே பெண்ணை சரமாரியாக வெட்டிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

    ராஜபாளையத்தை சேர்ந்தவர் மதீஸ்வரன். இவரது மனைவி பிரியா. இவர்களுக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    Cut the scythe to the lady due to family issue in Rajapalayam

    இந்நிலையில் தகராறு முற்றிய நிலையில், மனைவியை அரிவாளால் சரமாரியாக மதீஸ்வரன் தாக்கியுள்ளார். ராஜபாளையம் காவல்நிலையம் முன்னாலேயே இந்த வன்முறை சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த அரிவாளால் வெட்டினால் பிரியா பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து பொதுமக்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    உயிருக்கு போராடி வரும் பிரியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பட்டப்பகலில், பொதுமக்கள் முன்னிலையிலேயே நடைபெற்ற இந்த சம்பவத்தினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் உடனடி விசாரணையை துவக்கியுள்ளனர். இதன் பின்னரே முழு விவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Cut the scythe to the lady due to family issue in Rajapalayam, The lady is being treated in a dangerous situation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X