Cyclone Fani: தமிழக துறைமுகங்களில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றம்.. தயாராக இருக்க போலீசுக்கு உத்தரவு
Recommended Video
சென்னை: நாகை, காரைக்கால், கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெற்றுள்ளது. அது ஃபனி என்ற பெயரில் புயலாக மாறி வரும் 30ம் தேதி வாக்கில் தமிழகம், புதுச்சேரி கடல் பகுதியை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாகை, காரைக்கால், கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் இன்று, 1ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு பக்கம், பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற போலீசார் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று, தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.. அடுத்து புயல்தான்
பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று, கமிஷனர், ஐஜி, எஸ்பிக்களுக்கு உத்தரவிட்டுள்ளார் டிஜிபி. இதுதொடர்பாக இன்று அவர் சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார்.