வர்தா புயல் முன்னெச்சரிக்கை - இலவச அவசர உதவி எண்கள் அறிவிப்பு
சென்னை : வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள வர்தா புயல் தீவிரமடைந்துள்ளது. சென்னையிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள வர்தா புயல் நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என வானிலைமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடதமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகப்பட்சமாக 20 சென்டிமீட்டருக்கு மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள வர்தா புயல் நாளை பிற்பகல் கரையைக் கடக்கிறது.
இந்நிலையில் வர்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர உதவி எண்களை சென்னை பெருநகர மாநகராட்சி அறிவித்துள்ளது.
தொலைபேசி எண்கள்:
044- 2561 9206,2561 9511,2538 4965,2538 3694,2536 7823,2538 7570
வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ள:
94454 77207,94454 77203,94454 77206,94454 77201,94454 77205 இந்த எண்களில் பொதுமக்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை பெருநகர மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கடலூர் - 1077, 04142 220700, 231666 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
அவசரகால மின்னஞ்சல் முகவரிகள்:
[email protected] என்ற மின்னஞ்சல் முகவரிகளிலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.