For Daily Alerts
Just In
சொத்துக்குவிப்பு வழக்கு: அரசு ஊழியர்கள் கண்ணன் - அமுதா தம்பதிக்கு 5 ஆண்டு சிறை
மதுரை: வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில், அரசு ஊழியர் மற்றும் அவரது மனைவிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
கண்ணன், அமுதா ஆகிய இருவரும் வேலைவாய்ப்பு அலுவலர்களாக பணியாற்றியவர்கள். இவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, கண்ணன் - அமுதா தம்பதியினருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கு தீர்ப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Comments
English summary
A Government employees Kannan and Amutha have been convicted for the DA case. The Madras bench of Madurai bench of Madras High court sentenced him to five years imprisonment on Thursday.