அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறுத்த வேண்டும்.. பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறுத்தக்கோரி பிரதமருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறுத்தக்கோரி பிரதமருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அணை பாதுகாப்பு மசோதாவுக்கு கடந்த ஜூன் 13-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதே தேதியில் மத்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்தது. இந்த குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்படவுள்ளது.
இந்த மசோதா காரணமாக அணைகள் மீதிருக்கும், மாநில உரிமைகள் பறிபோகும். முக்கியமாக மாநில அரசால் பராமரித்து இயக்கப்படும் அணைகளை முறையாக பராமரித்து இயக்குவதில் சிக்கல் உருவாகும். இது நீர் பங்கீட்டில் மேலும் பிரச்சனைகள் ஏற்படுத்தும்.
இதற்கு எதிராக இன்று மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு அனைத்து கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தது.
இந்த நிலையில் தற்போது, அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறுத்தக்கோரி பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். தீர்மானத்தில் கூறப்பட்ட விஷயங்களை அவர் கடிதத்திலும் குறிப்பிட்டுள்ளார்.