காந்தி படுகொலை தினத்தை முன்னிட்டு சென்னை கவிக்கோ அரங்கத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நாள் கருத்தரங்கம்!
மகாத்மா காந்தி படுகொலை தினத்தை முன்னிட்டு சென்னை கவிக்கோ அரங்கத்தில் இன்று மாலை பயங்கரவாத எதிர்ப்பு நாள் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
சென்னை: மகாத்மா காந்தியடிகளின் படுகொலை தினத்தை முன்னிட்டு சென்னை கவிக்கோ அரங்கத்தில் இன்று மாலை பயங்கரவாத எதிர்ப்பு நாள் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
மகாத்மா காந்தியடிகள் கடந்த 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது 70வது நினைவுதினத்தை முன்னிட்டு இன்று மாலை 7 மணிக்கு சென்னை CIT காலனி ஆழ்வார்பேட்டையில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் மாணவர் இந்தியா சார்பாக சிறப்பு கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இந்த பயங்கரவாத எதிர்ப்பு நாள் கருத்தரங்கில் சிறப்பு விருத்தினார்களாக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ, கொங்கு இளைஞர் பேரவை கட்சியின் தலைவர் தனியரசு எம்எல்ஏ, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் த.வேல்முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிந்தன், ஊடகவியலாளர் பீர் முஹம்மது உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர் .