For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தஷ்வந்தை விட மோசமான மிருகங்கள் இந்த 17 பேருக்கும் எந்த தண்டனை தகும்?

தஷ்வந்தை போன்று இந்த 17 மிருகங்களுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    சிறுமி பலாத்காரம் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு சிறைக்காவல்- வீடியோ

    சென்னை: ஹாசினி வழக்கு குற்றவாளி தஷ்வந்தை போன்று சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்த 17 பேருக்கும் தூக்குத் தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

    நாடு முழுவதும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதை கட்டுப்படுத்த தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதுதான் அனைவரும் எதிர்பார்ப்பதாகும்.

    இந்நிலையில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கொடுமை நாளுக்கு நாள் கொடூரமாகிக் கொண்டே போகிறது.

    உச்சநீதிமன்றம்

    உச்சநீதிமன்றம்

    டெல்லி மாணவி நிர்பயா என்பவர் கடந்த 2012-ஆம் ஆண்டு 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு மிக கொடூரமான வகையில் தாக்கப்பட்டார். இதையடுத்து 6 பேரில் ராம் சிங் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மற்றொருவர் சிறுவர் என்பதால் அவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்த டெல்லி விரைவு நீதிமன்றம் ஏனைய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அப்போது 4 பேரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

    6 வயது சிறுமி

    6 வயது சிறுமி

    சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த ஹாசினி என்ற 6 வயது சிறுமியை பக்கத்து வீட்டில் வசிக்கும் யஷ்வந்த் என்ற பொறியியல் பட்டதாரி இளைஞர் சிறுமியை பலாத்காரம் செய்தார். இதையடுத்து உண்மையை சிறுமி யாரிடமும் கூறிவிடாமல் இருக்க அந்த சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தீவைத்து கொளுத்தினார்.

    தூக்கு தண்டனையை உறுதி செய்தது

    தூக்கு தண்டனையை உறுதி செய்தது

    இந்த வழக்கு தொடர்பாக செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து தனது தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அப்போது செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை ஹைகோர்ட் உறுதி செய்தது. தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டதால் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

    மாற்றுத்திறனாளி

    மாற்றுத்திறனாளி

    சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த சிறுமியை அந்த அபார்ட்மென்ட்டில் பணியாற்றும் 17 பேர் கடந்த 7 மாதங்களாக பலாத்காரம் செய்தனர். இது தொடர்பாக 17 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் 17 பேரும் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பேத்தி வயதில் இருக்கும் சிறுமியை பலாத்காரம் செய்ய ரவி என்ற மிருகத்துக்கு எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை.

    தண்டனை கொடுக்க வேண்டும்

    தண்டனை கொடுக்க வேண்டும்

    பலாத்காரம் செய்த 17 பேருக்கு தஷ்வந்துக்கு கொடுத்தது போல் மரண தண்டனை கொடுத்தால் மட்டுமே பாலியல் குற்றங்களை தடுக்க முடியும். நீங்காத நினைவுகளை தரும் குழந்தை பருவத்தில் இதுபோன்ற ஆறாத வடுக்களை தந்த இந்த கயவர்கள் தூக்கில் ஏற்றப்படுவதுதான் சரியான நீதியாகும்.

    English summary
    Death Sentence to be given to the rapist who raped 11 years old girl in Chennai. The girl is disabled person.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X